நான்-ஸ்டிக் பாத்திரங்களை எப்படி உபயோகித்தால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும்?

nonstick-panes-health-issue-scitamil
நான்-ஸ்டிக் பாத்திரங்களை உபயோகத்தில் என்பது இன்று தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. நகரத்தில் வாழும் இன்றைய தலைமுறையினர்  இரும்பு பாத்திரங்கள் அல்லது எவர்சில்வர் பாத்திரங்களை தவிர்த்து அழகுக்காகவும், பாத்திரங்களை சுத்தம் செய்ய எளிமையாக இருப்பதாலும் நான்-ஸ்டிக் பாத்திரங்களையே விரும்புகின்றனர்.
அவ்வாறு நாம் உபயோகிக்கும் நான்-ஸ்டிக் பாத்திரங்களில் உள்ள வேதி பொருட்களை பற்றி இங்கு காண்போம்.
நான்-ஸ்டிக் பாத்திரங்கள் ஒட்டாமல் இருக்க முக்கிய காரணம் அதன் மேல் பூசப்பட்டுள்ள டெப்லான் (Teflon) மற்றும் பாலி-டெட்ரா-ப்ளுரோ-எத்திலின் (PTFE) ஆகும்.

டெப்லான்:

  • டெப்லான் மற்றும் PTFE இரண்டுமே ஒன்று தான். 
  • டெப்லான் தனித்து புற்றுநோய்களை உருவாக்குவது இல்லை,   அதாவது குறைந்த வெப்பநிலையில் டெப்லான் எதனுடனும் வினைபுரிவதில்லை.  
  • ஆனால் அதிக வெப்பநிலையில் அதாவது பாத்திரங்களை அதிக சூட்டில் (570F/300டிகிரி-ல்) வைக்கும் போது டெப்லான் உறிந்து உணவு பொருட்களுடன் கலக்கும்போது   நமக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்துவதாக கண்டறிந்துள்ளனர்.

கருத்துக்கள்:

  • International Agency for Research on Cancer (IARC) -ன் கருத்துப்படி இதனால் கிட்னி செயலிழப்பு, மற்றும் நாளமில்லா சுரப்பிகளில் பாதிப்புகளை ஏற்ப்படுதுவதாக கண்டறிந்துள்ளனர்.
  • Environmental Protection Agency (EPA) -ன் கருத்துப்படி இது மனிதர்களிடம் என்ன விதமான பாதிப்புகளை ஏற்ப்படுத்துகிறது என்று கண்டறிய முடியவில்லை என்றும் ஆனால் விலங்குகளில் இது புற்றுநோய் ஏற்படுத்துகிறது என்றும் கூறியுள்ளனர்.

முடிவுகள்:

  • தற்போது மனிதர்களில் டெப்லான் பூச்சுகளால் ஃப்ளு ஏற்படுவது மட்டுமே உறுதியாகி உள்ளது. எனவே நான்-ஸ்டிக் பாத்திரங்களை அதிக சூட்டில் வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

நோய் பாதிப்பில் இருந்து நம்மை காக்க செய்யவேண்டியது:

  • நான்-ஸ்டிக் பாத்திரங்களை இரும்பு நரம்புகளைக் கொண்டு சுத்தம் செய்வதை முற்றிலும் தவிர்த்து தேங்காய் நார் அல்லது செயற்கை நார்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

                                              

  • அதிக சூட்டில் அல்லது வெறும் பாத்திரத்தை வைத்து சூடு செய்வதை தவிர்க்க வேண்டும்.
  • பாத்திரத்தில் அதிகளவு கோடுகள் இருப்பின் அதனை சீக்கிரமாக மாற்றுவது நல்லது.
  • பாத்திரங்களை சூடு செய்யும்போது அதில்லிருந்து வெளியேறும் புகை மற்றும் வாயுக்களை சரியான வேண்டிலஷன் முறையில் வெளியேறுவதன் மூலம் சுவாச பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

Read also : இரவில் தூங்கும் போது அருகில் ஏன் செல்போன்களை வைக்கக்கூடாது?  👀3.5k views

மாற்று பொருட்கள்:

டெப்லான் அற்ற மாற்று பொருட்களை பயன்படுத்துவது நன்மை பயக்கும்.
  • எவர்சில்வர் பாத்திரங்கள்.
  • இரும்பு பத்திரங்கள்.  
  • மண் பானை, மண் சட்டிகள்.
  • மர அல்லது தேங்காய் ஓட்டு கரண்டிகள். 

இரத்த சோகை உள்ளவர்கள் நான்-ஸ்டிக் தோசை கல்லுக்கு பதில் இரும்பு கல்லை பயன்படுத்துவதால் இயற்கையான இரும்பு சத்து கிடைபதாக ஆராய்சிகள் கூறுகிறது.

 மூலதனம்:

  1. அமெரிக்கன் புற்றுநோய் சங்கம் .
  2. Health line (Teflon and PFOA Exposure)
Exit mobile version