மீன்களில் கலக்கப்படும் பார்மலின்
பார்மலின் என்றால் என்ன?
- பார்மலின் என்பது பார்மால்டிஹைடு எனும் வேதிப் பொருளின் கரைசல் ஆகும். தண்ணீருடன் அளவில் 40% அளவுக்கோ அல்லது எடையில் 37% அளவுக்கோ பார்மால்டிஹைடு கலக்கப்படும்போது பார்மலின் உருவாகிறது. பார்மலின் ஒரு நிறமற்ற வேதிப் பொருள்.
- இது மருத்துவத்துறையில் கிருமிநாசினியாகவும் பதப்படுத்தியாகவும் பயன்படுத்தப்படுகிறது. பார்மலின் கலந்த நீரில் நாம் மாமிசம் அல்லது தாவரம் எதைப்போட்டு வைத்தாலும் அது கெடாமல் அப்படியே இருக்கும். பொதுவாக தாவரங்கள் அல்லது உடல் பாகங்களைப் பதப்படுத்தவே இது பயன்படுகிறது.
மீன்களில் ஏன் கலக்கப்படுகிறது பார்மலின்?
மீன்களில் பார்மலினைப் பயன்படுத்தினால்?
எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள்?
மேலும் சில தகவல்கள்:
- ஃபார்மால்டிஹைட் பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் மற்றும் சேதமடைந்த மனித உயிரணுக்களைக் கொல்லக்கூடிய ஒரு நச்சுப் பொருளாகும். உணவு உற்பத்தியாளர்கள் சில நேரங்களில் மீன், இறைச்சிகள், பால், நூடுல்ஸ் இறைச்சிகள் போன்ற உணவுகளுக்கு ஃபார்மால்டிஹைடுகளை சேர்க்கின்றனர். பல உணவுகள் இயற்கையாகவே சிறிய அளவில் ஃபார்மால்டிஹைடை கொண்டுள்ளன இருப்பினும், தற்போது செயற்கையாகவே அதிகப்படியான ஃபார்மால்டிஹைட் பல உணவுகளில் கலப்பது தெரியவந்துள்ளது.
- பல நாடுகளில் ஃபார்மால்டிஹைடை உணவுகளில் சிறிதளவு சேர்த்து விற்பனை செய்கின்றனர் காரணம் அவை கெட்டுவிடாமலும் அதிக தொலைவிற்கு குளிர்சாதனப்பெட்டியில் வைக்காமல் எடுத்துச்செல்ல முடியும் என்பதாலும் தான்.
- ஃபார்மால்டிஹைட் அளவு அதிமானால் நாளடைவில் அது புற்றுநோய் உருவாகும் சாத்தியகூறுகளை கொண்டுள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனால் மூச்சி தினறல் கடுமையாக ஏற்படும் அபாயம் உள்ளது, கருவுற்ற தாய்மார்கள் இது கலந்த உணவினை உண்ணும்போது அது குழந்தை வளர தேவையான சத்துகளை குறைத்து பெரும் பிரச்சனைக்கு வழிவகுக்கிறது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.